ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் அவர் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 37 நிமிடங்களே நீடித்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதுவரை யமாகுசியை 6 முறை சந்தித்துள்ள சிந்து, அவருக்கு எதிராக 4-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
சிந்து தனது அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானனை எதிர்கொள்கிறார்.