புரோ கபடி: தெலுகு-பெங்கால் ஆட்டம் சமன்

புரோ கபடி லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 37-37 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.
பாய்ந்து சென்று புள்ளியைக் கைப்பற்ற முனையும் தெலுகு வீரர்.
பாய்ந்து சென்று புள்ளியைக் கைப்பற்ற முனையும் தெலுகு வீரர்.

புரோ கபடி லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 37-37 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் இந்த 131-ஆவது ஆட்டம் புணேவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் தெலுகு டைட்டன்ஸ் அணி 21 ரைடு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி பெற்றது. பெங்கால் வாரியர்ஸ் அணி 20 ரைடு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 5 கூடுதல் புள்ளிகள் பெற்றது.
இதில் தெலுகு டைட்டன்ஸ் தரப்பில் 16 முறை ரைடு சென்ற நிலேஷ், 7 புள்ளிகளை கைப்பற்றினார். தடுப்பாட்டக்காரர் விஷால் பரத்வாஜ் 7 முயற்சிகளில் 4 டேக்கிள் புள்ளிகளைப் பெற்றார். இதேபோல் பெங்கால் வாரியர்ஸ் அணியில் ரைடர் ஜங் குன் லீ 14 முயற்சிகளில் 8 புள்ளிகள் கைப்பற்றினார். தடுப்பாட்ட வீரர் சுர்ஜீத் சிங் 6 முயற்சிகளில் 5 டேக்கிள் புள்ளிகள் வென்றார்.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே ரைடின் மூலம் தங்களது முதல் புள்ளியை கைப்பற்ற, 2-ஆவது நிமிடத்தில் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. 3-ஆவது நிமிடத்தில் தெலுகு வீரர் நிலேஷ் ரைடு புள்ளிகளைப் பெற, அந்த அணி 3-1 என முன்னிலை பெற்றது. 4-ஆவது நிமிடத்தில் ரைடு வந்த தெலுகு கேப்டன் ராகுல் செளதரியை அவுட் செய்த பெங்கால் 3-3 என சமன் செய்தது.
அடுத்த 3 நிமிடங்களில் அந்த அணி 6-4 என முன்னிலை பெற்றது. 9-ஆவது நிமிடத்தில் தெலுகுவை ஆல் அவுட் செய்த அந்த அணி அணி, 11-6 என்ற நிலையை எட்டியது. முதல் 10 நிமிடங்கள் வரையில் தெலுகு கேப்டன் ராகுல் ரைடு புள்ளியை கைப்பற்றத் தவற, 11-ஆவது நிமிடத்தில் அந்த அணி 6-15 என பின்தங்கியது.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் நிலேஷ், ராகுல் ஆகியோர் தெலுகு அணிக்கு ரைடு புள்ளிகளை வென்று தர, 11-16 என்ற நிலையை எட்டியது அந்த அணி. அப்போது பெங்காலை ஆல் அவுட் செய்த அந்த அணி, 17-ஆவது நிமிடத்தில் 16-18 என்ற நிலையை எட்டியது. இதனிடையே, முதல் பாதி முடிவில் பெங்கால் 20-17 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் பெங்கால் அபாரமாக ஆடி 24-18 என முன்னேறியது. எனினும், 15-ஆவது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் மூலம் 21-25 என்ற நிலையை தெலுகு டைட்டன்ஸ் எட்டியது. பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் ஆட இறுதியில் ஆட்டம் 37-37 என சமன் ஆனது. இதையடுத்து, பெங்கால் வாரியர்ஸ் இதுவரை ஆடிய 22 ஆட்டங்களில் 11 வெற்றிகள், 5 தோல்விகளுடன் 6 ஆட்டங்களை சமன் செய்து 77 புள்ளிகளுடன் "பி' பிரிவு முதலிடத்தில் உள்ளது. தெலுகு டைட்டன்ஸ் அணி 22 ஆட்டங்களில் 7 வெற்றி, 12 தோல்விகளுடன் 3 ஆட்டங்களை சமன் செய்து 52 புள்ளிகளோடு அதே பிரிவில் 5-ஆவது இடத்தில் உள்ளது.
குஜராத் வெற்றி: இதனிடையே, புணேரி பால்டான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 23-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com