அமெரிக்காவின் "என்பிஏ ஜி லீக்' கூடைப்பந்தாட்டப் போட்டிக்கான ஏலத்தில் இந்திய கூடைப்பந்து அணி வீரர் அம்ஜியோத் சிங் பங்கேற்கிறார்.
சண்டீகரைச் சேர்ந்த 25 வயதான அம்ஜியோத் சிங், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் அங்கம் வகித்து வருகிறார். இந்தியாவில் நடைபெறும் "யுபிஏ புரோ கூடைப்பந்து லீக்' போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார் அம்ஜியோத் சிங். 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட இவர், முன்கள வீரர் ஆவார். இதனிடையே, "என்பிஏ ஜி லீக்' கூடைப்பந்தாட்டப் போட்டிக்கான ஏலத்தில் 146 வீரர்களில் ஒருவராக அம்ஜியோத் சிங்கும் பங்கேற்கிறார்.