மும்பை 374 ரன்கள்; ஏமாற்றமளித்த முரளி விஜய் & முகுந்த்!

முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெறாத தமிழக அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது...
மும்பை 374 ரன்கள்; ஏமாற்றமளித்த முரளி விஜய் & முகுந்த்!

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 374 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. 

மும்பையில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாளில் மும்பை 89.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியபோது மும்பை அணியை 374 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது தமிழ்நாடு. விஜய் சங்கர் 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். மும்பை தரப்பில் பிருத்வி ஷா 123 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களும் எடுத்தார்கள். 

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தமிழக அணி, மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. டெஸ்ட் பேட்ஸ்மேன்களான விஜய் 11 ரன்களிலும் அபினவ் முகுந்த் 9 ரன்களிலும் ஆட்டமிழந்துள்ளார்கள்.

தமிழக அணி முன்னதாக ஆந்திரம் மற்றும் திரிபுரா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தைச் சமன் செய்ததன் மூலம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெறாத தமிழக அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com