புதுச்சேரி கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தி.
அடுத்த வருட ரஞ்சி போட்டியில் புதுச்சேரியும் பங்குபெறவுள்ளது.
ஆம். புதுச்சேரி கிரிக்கெட் அணிக்கு அசோசியேட் உறுப்பினர் பதவியை அளித்துள்ளது பிசிசிஐ. இதை பிசிசிஐ நிர்வாகக் குழுவும் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து அடுத்த வருட ரஞ்சி போட்டியில் பங்குபெறும் தகுதியை புதுச்சேரி அடைந்துள்ளது.
சிஏபி எனப்படும் புதுச்சேரி கிரிக்கெட் சங்கம், கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்யவும் அதிகாரபூர்வ அமைப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் புதிய வாய்ப்பால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் புதுச்சேரிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதனால் சர்வதேசத் தரத்துடனான ஒரு புதிய கிரிக்கெட் மைதானத்தை புதுச்சேரியில் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.