சுரேஷ் ரெய்னா, தற்போது இந்திய டெஸ்ட் அணியிலும் இல்லை, ஒருநாள் அணியிலும் இல்லை.
அவர் தற்போது துலீப் டிராபி போட்டிக்கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா. தவிரவும் சென்னையில் நடைபெறும் புச்சிபாபு போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.
இந்திய அணிக்காக 223 ஒருநாள் போட்டிகளிலும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடிய ரெய்னா இவ்விரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதில் ஆவலாக உள்ளார்.
துலீப் டிராபி லக்னோவில் செப்டம்பர் 7 முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ரெய்னா.
இந்நிலையில் துலீப் டிராபிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரெய்னாவை நேரில் சந்தித்து ஊக்கம் அளித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இதை முதலில் ட்விட்டரில் பதிவு செய்தார் சச்சின்.
என் மீது நம்பிக்கை வைக்க எப்போதும் நீங்கள் உதவியுள்ளீர்கள். உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி என ரெய்னா சச்சினுக்குப் பதில் அளித்துள்ளார்.