டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இலங்கையுடனான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் டி20 போட்டி கொழும்புவில் நடைபெறுகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

இந்தியா:

ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, யுசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.

இலங்கை:

நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), உபுல் தரங்கா (கேப்டன்), தில்ஷன் முனவீரா, ஆஷான் ப்ரியன்ஜன், ஏஞ்சலோ மாத்யூஸ், தஸுன் ஷனகா, சேக்குகே பிரசன்னா, திசாரா பெரேரா, அகில தனஞ்செயா, லாசித் மலிங்கா, இசுரு உடானா.

முன்னாதாக இவ்விரு அணிகளுக்கு இடையில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com