காயம்: எஞ்சிய போட்டிகளில் இருந்தும் விலகினார் ஆன்டி முர்ரே

பிரிட்டன் டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே, இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த ஆண்டின் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
காயம்: எஞ்சிய போட்டிகளில் இருந்தும் விலகினார் ஆன்டி முர்ரே

பிரிட்டன் டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே, இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த ஆண்டின் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
உலகின் 2-ஆம் நிலை வீரரான முர்ரே, தற்போது நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை அவர் கூறியதாவது:
இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் சில மாதங்களாக பிரச்னையாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இடுப்பு சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து வந்தேன். அதையடுத்து, எனது டென்னிஸ் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் எஞ்சிய அனைத்து போட்டிகளில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளேன்.
எனவே, பெய்ஜிங், ஷாங்காய், வியன்னா, பாரீஸில் நடைபெறும் போட்டிகளில் என்னால் பங்கேற்க இயலாது. இந்த ஓய்வுக்குப் பிறகு காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து, மீண்டும் டென்னிஸில் சிறந்த இடத்தை பிடிப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன். 2018-ஆம் ஆண்டு சீசனை பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து தொடங்க உள்ளேன் என்று ஆன்டி முர்ரே கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் பிரெஞ்சு ஓபன் போட்டி அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவிடம் வீழ்ந்த முர்ரே, அதைத் தொடர்ந்து விம்பிள்டன் காலிறுதியில் அமெரிக்காவின் சாம் கெர்ரியிடம் தோற்றிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com