நம் இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுரை கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் விராட் கோலி கூறியதாவது:
முயற்சி செய்வதற்கு முன்பே நாம் நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்கிறோம். பெரும்பாலானவர்கள் எழுபது சதவிகித முயற்சியின்போது நிறுத்திக்கொள்கிறீர்கள். நம் இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்.
எனக்கு கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 10 வருடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் தற்போது கடுமையாக முயற்சி செய்கிறேன். கிரிக்கெட்டிலிருந்து விலகிய பிறகு என் வாழ்க்கையில் நான் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை. ஆகவே வாய்ப்பு கிடைக்கும்போது சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறேன். அதற்காக முழுமுயற்சி எடுக்கிறேன். சிறிய விஷயங்களில் - நான் என்ன சாப்பிடுகிறேன், எப்படிப் பயிற்சி எடுக்கிறேன் போன்றவற்றில் கவனம் எடுத்துக்கொள்கிறேன் என்றார்.