மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டி வருகிற 17-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய இடைவேளைக்குப் பிறகு இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் திரும்பி உள்ளனர். தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வரும் அஸ்வின் மற்றும் ரவிந்தர் ஜடேஜா ஆகியஇருவருக்கும் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்த இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ரஹானே, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்டே, அக்ஸர் படேல், யஜூவேந்திரா ஷாகல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.