செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...
*இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில், அது குறித்துப் பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, 'ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரை வீழ்த்துவதற்கு சில திட்டங்களை வகுத்துள்ளதாக' தெரிவித்துள்ளார்.
*சென்னையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது முந்தைய சுற்றில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான தல்விந்தர் சிங்கை வீழ்த்தினார்.
*இத்தாலியின் வடக்குப் பகுதியான போல்ஸானோ நகரில் உள்ள பூங்காக்களில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். அங்கு சிலர் கிரிக்கெட் விளையாடியபோது பந்து பட்டதில் 2 வயது சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்தே தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com