கொரியா ஓபன்: அரையிறுதியில் சிந்து

கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
தென் கொரிய தலைநகர் சியோலில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் பி.வி.சிந்து 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மினட்சு மிடானியை தோற்கடித்தார்.
1 மணி, 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார் சிந்து. தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது செட்டில் அபாரமாக ஆடிய மிடானி, அதை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் சிந்து அபாரமாக ஆட, அவரை சமாளிக்க முடியாமல் மிடானி தடுமாறினார். இதனால் அந்த செட்டை சிந்து 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
மிடானியுடன் 3-ஆவது முறையாக மோதியுள்ள சிந்து, 2-ஆவது முறையாக அவரை வீழ்த்தியுள்ளார். போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து தனது அரையிறுதியில் சீனாவின் பிங் ஜியாவை சந்திக்கிறார். பிங் ஜியாவ் தனது காலிறுதியில் 21-7, 21-13 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சங் ஜீ ஹியூனை தோற்கடித்தார்.
சமீர் வர்மா தோல்வி: அதேநேரத்தில் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சமீர் வர்மா 22-20, 10-21, 13-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சன் வானிடம் தோல்வி கண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com