செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-பூரவ் ராஜா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பயஸ்-ராஜா ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி-அமெரிக்காவின் ஜேம்ஸ் செரட்டானி ஜோடியைத் தோற்கடித்தது.
பயஸ்-ராஜா ஜோடி தங்களின் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல்-பிரேசிலின் மார்செலோ டெமாலினர் ஜோடியை சந்திக்கிறது.