ஜப்பான் ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த், பிரணாய் தோல்வி

ஜப்பான் ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த், பிரணாய் தோல்வி

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டனர்.

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஸ்ரீகாந்த் 17-21, 17-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்சனிடம் தோல்வி கண்டார். விக்டருடன் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ள ஸ்ரீகாந்த், 3-ஆவது தோல்வியை சந்தித்துள்ளார்.
மற்றொரு காலிறுதியில் எச்.எஸ்.பிரணாய் 15-21, 14-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள சீனாவின் ஷி யூகியிடம் தோல்வி கண்டார். 
அரையிறுதியில் பிரணவ் ஜோடி: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 21-19, 9-21, 21-19 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சியூங் ஜே சியோ-கிம் ஹா நா ஜோடியைத் தோற்கடித்தது. 
பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி தங்களின் அரையிறுதியில் ஜப்பானின் டகுரோ ஹோகி-சயாக்கா ஹிரோட்டா ஜோடியை சந்திக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com