சென்னையில் நடைபெற்று வரும் 57-ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 5,000 மீ. ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கம் வென்றார்.
லட்சுமணன் 14 நிமிடம், 4.21 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். ரயில்வே வீரர் அபிஷேக் பால் (14:8.38) 2-ஆவது இடத்தையும், சர்வீசஸ் வீரர் மான் சிங் (14:8.87) 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
மகளிர் 5,000 மீ. ஓட்டத்தில் ரயில்வே வீராங்கனை சூர்யா 16 நிமிடம், 2.85 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் மற்றொரு ரயில்வே வீராங்கனையான சிந்தா யாதவ் (16:40.45) 2-ஆவது இடத்தையும், அகில இந்திய காவல் துறையைச் சேர்ந்த சாய்கீதா நாயக் 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
ஆடவர் குண்டு எறிதலில் சர்வீசஸ் வீரர் தேஜிந்தர் பாலும் (18.6 மீ.) , மகளிர் சங்கிலி குண்டு எறிதலில் ரயில்வே வீராங்கனை சரிதா பி.சிங்கும் (60.54 மீ.) முதலிடத்தைப் பிடித்தனர்.