ரஞ்சிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய டெஸ்ட் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, புஜாரா, விஜய் ஆகிய வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.
ரஞ்சிப் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாக அஸ்வின், விஜய் ஆகிய இருவரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குத் தகவல் அளித்துள்ளார்கள். ஜடேஜா, புஜாரா ஆகிய இருவரும் செளராஷ்டிரா அணியின் 15 பேர் கொண்ட ரஞ்சி அணியில் இடம்பிடித்துள்ளார்கள். அந்த அணியின் கேப்டனாக புஜாரா அறிவிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 6 அன்று செளராஷ்டிரா - ஹரியாணா ஆகிய அணிகளுக்கு இடையேயான ரஞ்சி ஆட்டம் லஹ்லியில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு - ஆந்திரா இடையேயான ரஞ்சி ஆட்டம் அக்டோபர் 9 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் விஜய், அஸ்வின் ஆகிய இருவரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.