சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்களில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே ஆன ஆட்டம் மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.