பெய்ஜிங்கில் வியாழக்கிழமை தொடங்கும் வோல்வா சீன ஓபன் கோல்ஃப் போட்டியில் இந்திய வீரர்கள் 8 பேர் பங்கேற்கின்றனர்.
கோல்ஃப் விளையாட்டில் தற்போதைய நட்சத்திர வீரர் சுபாங்கர் சர்மா, ஜீவ் மில்கா சிங், ஷிவ் கபூர், சாவ்ரஸ்யா, ககன்ஜீத் புல்லார், அர்ஜுன் அத்வால், அஜிதேஷ் சாந்து, காலின் ஜோஷி உள்ளிட்டோர் சீன ஓபனில் பங்கேற்கின்றனர். அண்மையில் மலேசியாவில் நடந்த ஜோபர்க், டி-9 போட்டிகளில் சுபாங்கர் சர்மா பெற்ற வெற்றி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
உலகின் தலைசிறந்த கோல்ஃப் வீரர்கள் இதில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.