16 வயதுக்குட்பட்டோருக்கான ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது.
மலேசியாவில் வரும் செப்டம்பர் மாதம் 16 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பை கால்பந்து இறுதிச்சுற்று நடக்கிறது. இதற்கான அணிகள் குலுக்கல் வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த தகுதிப் போட்டியில் இந்திய சிறுவர் அணி தேர்வு பெற்றது.
கடந்த இறுதிச் சுற்று போட்டிகள் கோவாவில் நடைபெற்றன. இதுகுறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிபியனோ பெர்ணான்டஸ் கூறியதாவது: ஓரே நேரத்தில் ஒரு போட்டியில் அணி பங்கேற்கும். வலுவான அணிகளுடன் இந்தியா டிரா செய்துள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெறுவதே முதல் நோக்கமாகும். சிறுவர்கள் திறனை மேம்படுத்த ஏஐஎப்எப் கடுமையாக செயலாற்றி வருகிறது என்றார்.