ஜூனியர் என்பிஏ உலக கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் இந்திய சிறுமிகள் அணி 40-37 என்ற புள்ளிக்கணக்கில் ஒருங்கிணைந்த தென் அமெரிக்க அணியை வீழ்த்தியது.
14 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் என்பிஏ கூடைப்பந்து உலக சாம்பியன் போட்டிகள் அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் நடக்கிறது. இந்திய சிறுமியர் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ஆசிய-பசிபிக், ஐரோப்பிய அணிகளிடம் தோல்வியுற்றது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தென் அமெரிக்க அணியை 40-37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.
சுனிஷ்கா கார்த்திக் 17, புள்ளிகளை குவித்தார். தென் அமெரிக்க அணியில் ஜோஸ்பினா பலாட்டி 13 புள்ளிகளை குவித்தார்.
இந்திய சிறுவர் அணி 49-56 என்ற புள்ளிக்கணக்கில் தென் அமெரிக்காவிடம் தோல்வியுற்றனர். எனினும் இந்திய சிறுவர், சிறுமியர் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.