தொடர் தோல்விகள்: ரசிகர்களிடம் விராட் கோலி உருக்கமான கோரிக்கை!

இந்திய கேப்டன் விராட் கோலி, சமூகவலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
தொடர் தோல்விகள்: ரசிகர்களிடம் விராட் கோலி உருக்கமான கோரிக்கை!

பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இரண்டாம் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 9-ம் தேதி தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி, சமூகவலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சில நேரங்களில் நாம் வெற்றி பெறுவோம், சில நேரங்களில் கற்றுக்கொள்வோம். எங்களை நீங்கள் எப்போதும் கைவிடவேண்டாம். உங்களையும் நாங்கள் எந்தத் தருணத்திலும் கைவிடமாட்டோம் என்றும் உறுதியளிக்கிறோம் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com