இந்தியாவை எளிதாக எடைபோட இயலாது

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துவிடலாம் என இப்போதே கணிக்க இயலாது என்று இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் கூறியுள்ளார்.
இந்தியாவை எளிதாக எடைபோட இயலாது

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துவிடலாம் என இப்போதே கணிக்க இயலாது என்று இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் கூறியுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்ற, ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. 
இந்நிலையில், 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா, முதல் 2 டெஸ்டுகள் முடிந்த நிலையில், இரண்டிலுமே தோல்வி கண்டது. அதிலும் 2-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடர் குறித்து இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் கூறியதாவது:
சொந்த மண்ணின் சூழ்நிலையில் விளையாடி வென்றுள்ளோம். உள்நாட்டு மைதானங்களில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். எனினும், இந்திய அணியை எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது.
டெஸ்ட் தரவரிசையில் உலகின் முதல் நிலை அணியாக இந்தியா இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தத் தொடர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, இந்தியாவை ஒயிட்வாஷ் செய்வதைப் பற்றி இப்போதே அனுமானம் கூற இயலாது. வானிலை சீரடைந்து அடுத்து போட்டி நடைபெறவுள்ள மைதான ஆடுகளங்கள் சற்று வறட்சி அடையாம்.
எனவே, தொடர் வெற்றியை நோக்கி நெருங்கி விட்டதாக இப்போதே நாங்கள் ஆசுவாசம் அடையப்போவதில்லை. 3-ஆவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இணைவது எங்களுக்கு கூடுதல் பலமாகும். இரவு விடுதி சர்ச்சை வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜானி பேர்ஸ்டோவ் கூறினார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 18-ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. 4-ஆவது டெஸ்ட் செளதாம்டனில் 30-ஆம் தேதியும், கடைசி டெஸ்ட் ஓவலில் செப்டம்பர் 7-ஆம் தேதியும் தொடங்குகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com