செயின்ட் லூயிஸ் செஸ்: ஆனந்த் தடுமாற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் செயின்ட் லூயிஸ் ரேபிட்-பிளிட்ஸ் செஸ் போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகளுடன் கடைசி வீரராக 10-ஆவது இடத்தில் பின்தங்கினார்.
செயின்ட் லூயிஸ் செஸ்: ஆனந்த் தடுமாற்றம்


அமெரிக்காவில் நடைபெறும் செயின்ட் லூயிஸ் ரேபிட்-பிளிட்ஸ் செஸ் போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகளுடன் கடைசி வீரராக 10-ஆவது இடத்தில் பின்தங்கினார். முதல் நாள் ஆட்டத்தை 2 தோல்விகளுடன் தொடங்கிய ஆனந்த், சில ஆட்டங்களை டிரா செய்ததோடு, ஒரு வெற்றியும் பெற்று 3.5 புள்ளிகள் எடுத்தார்.
அமெரிக்காவின் ஹிகாரு நகாமுரா, அஜர்பைஜானின் மமேதியாரோவ் ஆகியோர் 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தஃபாபியானோ கருனா 15.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தார். பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியர் 15 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடிக்க, அர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் 14 புள்ளிகளுடன் 5-ஆவது இடம் பிடித்தார். ரஷியாவின் செர்கேய் கர்ஜாகின், கியூபாவின் லெனியர் டொமின்கஸ், ரஷியாவின் அலெக்ஸாண்டர் கிரிஷுக், அமெரிக்காவின் வெஸ்லி சோ ஆகியோர் முறையே அடுத்த 4 இடங்களைப் பிடித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com