லண்டனில் மூவர்ணக் கொடியேற்றிய இந்திய அணி

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நாட்டின் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்தியது.
தேசியக் கொடியுடன் குல்தீப், பும்ரா.
தேசியக் கொடியுடன் குல்தீப், பும்ரா.


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நாட்டின் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்தியது.
இந்திய அணியினர் தங்கியிருந்த ஹோட்டல் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய இந்திய கேப்டன் கோலி, இந்திய மக்களுக்கு, இங்கிலாந்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் சுதந்திர தின வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டார். கொடியேற்ற நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களுடன் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் சுட்டுரையில் சுதந்திர தின வாழ்த்துகளை வெளியிட்டனர். இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு இந்திய அணி 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக நாட்டிங்ஹாம் புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com