சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹலேப், டெல் பொட்ரோ ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
யுஎஸ் ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் சின்சினாட்டி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹலேப் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையிலும் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அஜ்லா டோம்லிஜாநோவிக்கை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கிகி பெர்டென்ஸ்-அனெட் கொண்டவிட் இடையிலான ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. நான்காம் நிலை வீராங்கனை கெர்பர் 2-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மடிசன் கெய்ஸிடம் வீழ்ந்தார்.
யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 7-6. 6-2 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் எலிஸி மெர்டன்ஸிடம் வீழ்த்தி வெளியேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆர்ஜென்டீனாவின் டெல் பொட்ரோ 6-2, 6-2 என நேர் செட்களில் தென்கொரியாவின் சுங் ஹியோனை வீழ்த்தினார். மிலோஸ் ரனோயிக் 7-6, 6-4 என டெனிஸ் ஷபலோபவை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜோகோவிச்-கிரிகோர் டிமிட்ரோவ் இடையிலான ஆட்டம் மழையால் ஒத்தி வைக்கப்பட்டது.
பந்தை திருப்பும் சிமோனா.