இந்தியா ஏ அணி வெற்றி

நியூஸி. ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய ஏ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நியூஸி. ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய ஏ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
 முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது.
 நியூஸி ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 299 ரன்களை குவித்தது. ஜார்ஜ் வொர்க்கர் 99, வில் யங் 102, டேரி மிச்செல் 45 ரன்களை எடுத்தனர். இந்திய தரப்பில் கலில் அகமது, நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டையும், சித்தார்த் கவுல், அக்ஸர் பட்டேல், கிருஷ்ணப்பா கெளதம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 300 ரன்கள் வெற்றி இலக்கோடு பின்னர் ஆடிய இந்திய ஏ அணி 49 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 300 ரன்களை எடுத்து வென்றது. ஷிரேயஸ் ஐயர் 59, கேப்டன் மணிஷ் பாண்டே 111, விஜய் சங்கர் 59 ரன்களை எடுத்தனர். நியூஸி. ஏ தரப்பில் பென்னட், கோலே தலா 2 விக்கெட்டையும், சேத் ரேன்ஸ் 1 விக்கெட்டை எடுத்தனர். இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com