உலக பாட்மிண்டன் டூர் பைனல்ஸ்: துவக்க ஆட்டத்தில் சிந்து அபாரம்

உலக பாட்மிண்டன் சம்மேளன வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியின் துவக்க ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
உலக பாட்மிண்டன் டூர் பைனல்ஸ்: துவக்க ஆட்டத்தில் சிந்து அபாரம்

உலக பாட்மிண்டன் சம்மேளன வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியின் துவக்க ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
உலகின் தலைசிறந்த 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலக பாட்மிண்டன் டூர் பைனல்ஸ் போட்டி ஆண்டு இறுதியில் நடத்தப்படுகிறது. ஒலிம்பிக் வெள்ளி வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை சிந்து புதன்கிழமை நடைபெற்ற துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜப்பானின் அகேன் எமகுச்சியை எதிர்கொண்டார். இதில் பொறுமையாக ஆடிய சிந்து 24-22, 21-15 என்ற கேம் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா, 18-21, 6-21 என்ற கேம் கணக்கில் உலகின் முதல்நிலை வீரர் கென்டோ மொமடோவிடம் துவக்க ஆட்டத்தில் தோல்வியுற்றார். நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் சமீர் அடுத்த 2 ஆட்டங்களில் வெல்ல வேண்டும். 
கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற போட்டியில் சிந்து இரண்டாம் இடம் பெற்றார். ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரண்டு இடங்களைப் பெறுவோர் அரையிறுதிக்கு முன்னேறுவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com