பெர்த் டெஸ்ட்: ஏமாற்றமளித்த இந்திய அணியின் பந்துவீச்சும் அணித் தேர்வும்

முதல் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸி. அணி 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது... 
பெர்த் டெஸ்ட்: ஏமாற்றமளித்த இந்திய அணியின் பந்துவீச்சும் அணித் தேர்வும்

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக பெர்த்தில் 2-வது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் விஹாரியும் உமேஷ் யாதவும் இடம்பிடித்துள்ளார்கள். முதல் டெஸ்டில் இடம்பெற்ற அதே வீரர்களே ஆஸி. அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தாலும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களான ஆரோன் ஃபிஞ்சும் ஹாரிஸும் நன்கு விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தார்கள். எனினும் இதன்பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்ததால் நிதானப் போக்கைக் கடைப்பிடித்தார்கள்.

முதல் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸி. அணி 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் 36, ஃபிஞ்ச் 28 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதன்பிறகு 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் எடுத்துள்ளது ஆஸி. அணி.

உமேஷ் யாதவுக்குப் பதிலாக ஜடேஜாவையோ அல்லது புவனேஸ்வர் குமாரையோ கோலி தேர்வு செய்திருக்கலாம் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளார்கள். தவறான அணித் தேர்வால் இந்திய அணி 2-வது டெஸ்டில் தோல்வியடையுமோ என்றும் பலர் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com