நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை முதல் நாள் முடிவில் 87 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது.
நியூஸிலாந்தில் சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அந்நாட்டு அணி பந்துவீச தீர்மானித்தது.
பேட் செய்த இலங்கையில் அதிகபட்சமாக ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 83 ரன்கள் விளாசினார். கருணாரத்னே 79 ரன்கள் அடித்தார்.
இதர வீரர்களில் தில்ருவன் மட்டும் 16 ரன்கள் எடுக்க, குணதிலகா 1, தனஞ்ஜெயா 1, மெண்டிஸ் 2, கேப்டன் சண்டிமல் 6, லக்மல் 3, ரஜிதா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசியாக நிரோஷன் டிக்வெல்லா 10 பவுண்டரிகள் உள்பட 73 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருடன் லாஹிரு குமரா ஞாயிற்றுக்கிழமை இணைகிறார்.
நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி 5, நீல் வாக்னர் 2, டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.