ரஞ்சி கிரிக்கெட்: பஞ்சாப் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ûஸ தொடங்கியுள்ள பஞ்சாப், சனிக்கிழமை முடிவில் 79 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் விளாசியுள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ûஸ தொடங்கியுள்ள பஞ்சாப், சனிக்கிழமை முடிவில் 79 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் விளாசியுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட பஞ்சாப் 93 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக, முதலில் பேட் செய்த தமிழ்நாடு முதல் நாள் முடிவில் 84 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கி 85-ஆவது ஓவர் முடிவில் சாய் கிஷோர் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, தமிழ்நாடு இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
85 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது தமிழ்நாடு.
பஞ்சாப் இன்னிங்ஸ்: 
இதையடுத்து முதல் இன்னிங்ûஸ தொடங்கிய பஞ்சாபில், தொடக்க வீரர் ஜீவன்ஜோத் சிங் 33 ரன்களுக்கு நடையைக் கட்ட, அன்மோல்பிரீத் சிங் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சனிக்கிழமை முடிவில் சுபம் கில் 199, மன்தீப் 50 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு தரப்பில் நடராஜன், சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com