ஐந்தாவது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைப்பு! 

ஐந்தாவது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைப்பு! 

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, தற்பொழுது 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் செவ்வாயன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கினைத் தேர்வு செய்தது. எனவே தற்பொழுது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா:

ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே,  ஸ்ரேயாஸ் அய்யர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா.

தென்ஆப்பிரிக்கா:

மார்க்ரம் (கேப்டன்), ஹசிம் அம்லா, ஜேபி டுமினி, டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர், ஹெயின்ரிச் கிளாசன், ஏண்டில் பெலுக்வாயோ, ககிசோ ரபாடா, நிகிடி, மோர்னே மோர்க்கல், தப்ரய்ஸ் ஷாம்சி,

போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்ற இந்தியாவும், தொடரில் தக்க வைக்க தென் ஆப்பிரிக்காவும் போராடும் என்பதால் போட்டியில் சூடு பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com