அணிக்கு திரும்பினார் சுரேஷ் ரெய்னா: இந்தியா முதல் பேட்டிங்

அணிக்கு திரும்பினார் சுரேஷ் ரெய்னா: இந்தியா முதல் பேட்டிங்

ஜோஹன்னஸ்பர்க் டி20-யில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா மீண்டும் இடம்பிடித்தார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜோஹன்னஸ்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்கா வந்துள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்தியா, 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. 

இது, தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வெல்லும் முதல் ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எஞ்சியுள்ள டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களம் காண உள்ளன. 

இந்நிலையில், முதல் டி20-யில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்குப் பிறகு சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயதேவ் உனத்கட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com