மகாராஷ்டிர ஓபன்: சுமித் நாகல் தோல்வி; யூகி பாம்ப்ரி வெற்றி

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலாரஸ் வீரர் ஐ. இவாஷ்காவிடம் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், பெலாரஸ் வீரர் இவாஷ்காவுக்கு எதிராக பந்தை திருப்பும் சுமித் நாகல்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், பெலாரஸ் வீரர் இவாஷ்காவுக்கு எதிராக பந்தை திருப்பும் சுமித் நாகல்.

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலாரஸ் வீரர் ஐ. இவாஷ்காவிடம் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், சகநாட்டவரான அர்ஜுன் காதேவை வீழ்த்தினார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இவாஷ்காவை எதிர்கொண்டார் சுமித் நாகல்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் இவாஷ்கா கைப்பற்றினார். அதற்கு அடுத்த செட்டையும் அவர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதனால், நாகல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
யூகி வெற்றி: இதனிடையே, மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அர்ஜுன் காதேவை முதல் இரண்டு செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் யூகி பாம்ப்ரி.
புதன்கிழமை நடைபெறவுள்ள அந்த ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பி.ஹெச்.ஹெர்பெர்டை எதிர்கொள்கிறார் யூகி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com