ஷென்ஸென் ஓபன்: காலிறுதியில் சைமோனா

சீனாவில் நடைபெற்று வரும் ஷென்ஸென்  ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

சீனாவில் நடைபெற்று வரும் ஷென்ஸென்  ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
முந்தைய சுற்றில் அவர் சீனாவின் டுவான் யிங்யிங்கை 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதர ஆட்டங்களில் ருமேனியாவின் இரினா கேமிலியா பெகு 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வென்றார். 
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செக் குடியரசின் காட்டெரினா சினியாக்கோவா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் யஃபானை வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com