சீனாவில் நடைபெற்று வரும் ஷென்ஸென் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
முந்தைய சுற்றில் அவர் சீனாவின் டுவான் யிங்யிங்கை 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதர ஆட்டங்களில் ருமேனியாவின் இரினா கேமிலியா பெகு 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வென்றார்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செக் குடியரசின் காட்டெரினா சினியாக்கோவா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் யஃபானை வென்றார்.