இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஸீவா, ரசிகர்களின் தேவதையாகத் திகழ்கிறார்.
அவர் செய்யும் ஒவ்வொரு குறும்புச் செயல்களையும் அவரது தாயார் சாக்ஷி மற்றும் தந்தை தோனி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஸீவாவுக்கென இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் அவருடைய குறும்புகள் அடங்கிய புகைப்படங்கள், விடியோக்கள் என அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸீவா பாடிய மலையாளப் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஸீவா படிக்கும் பள்ளியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. மகளின் முதலாவது பள்ளி ஆண்டு விழாவை அடுத்து தந்தை தோனி, நேரில் சென்று அங்குள்ள அனைத்து குழந்தைகளுடனும் உற்சாகக் குரல் எழுப்பி அவர்களுடன் குதூகலித்தார்.
தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் தோனிக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைப்பதால் அதை இவ்வாறு பயன்படுத்தி வருகிறார்.
அடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் 11-ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.