'திறமையை நிரூபிக்க தவறிவிட்டார் இஷாந்த்'

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தனது வேகப்பந்து வீச்சால் எதிரணியை திணறடிக்க தவறிவிட்டார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராஜு குல்கர்னி தெரிவித்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தனது வேகப்பந்து வீச்சால் எதிரணியை திணறடிக்க தவறிவிட்டார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராஜு குல்கர்னி தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:
இஷாந்த் சர்மா இதுவரை 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் தனது திறமையை நிரூபிக்க அவர் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் புதிய யுக்திகளை கையாளத் தவறுவதில்லை. ஆனால், அதுவே அவரை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையாகச் செயல்பட்டு வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் நமது பந்து வீச்சாளர்களின் திறமை மெச்சும்படியாக இருந்தது என்றார் குல்கர்னி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com