ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 1,122 வீரர்கள் பதிவு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அணியின் யுவராஜ் சிங், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் உள்பட 1,122 உள்நாட்டு மற்றும் சர

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அணியின் யுவராஜ் சிங், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் உள்பட 1,122 உள்நாட்டு மற்றும் சர்வதேச வீரர்கள் பதிவு செய்துகொண்டுள்ளதாக பிசிசிஐ அமைப்பு தெரிவித்தது.
இதுதொடர்பாக 8 ஐபிஎல் அணிகளுக்கு அந்த அமைப்பு சனிக்கிழமை அனுப்பிய பட்டியலில், "டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடும் வீரர்கள், உள்நாட்டில் மட்டும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் என மொத்தம் 1,122 வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்குப் பதிவு செய்துகொண்டுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்பட 8 ஐபிஎல் அணிகளில் இடம்பெறவுள்ள வீரர்கள், இம்மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஏலம் பெங்களூரில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com