ஐசிசி விருதுகள்: இந்திய வீரர்களுக்குக் கிடைத்த கெளரவம்!

ஐசிசி கனவு டெஸ்ட் அணியில் கோலி, புஜாரா, அஸ்வின் ஆகிய மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்...
ஐசிசி விருதுகள்: இந்திய வீரர்களுக்குக் கிடைத்த கெளரவம்!

2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

2017-ம் ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த ஒருநாள் வீரர் என இந்திய கேப்டன் விராட் கோலி இரு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளார். இதுதவிர ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் விராட் கோலி தேர்வாகி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

ஐசிசி கனவு டெஸ்ட் அணியில் கோலி, புஜாரா, அஸ்வின் ஆகிய மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

ஐசிசி கனவு ஒருநாள் அணியில் கோலி, ரோஹித் சர்மா, பூம்ரா ஆகிய மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

இதுதவிர சிறந்த டி20 பங்களிப்பாக இந்தியாவின் சாஹல் தேர்வாகியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சாஹல். இதற்கு விருது கிடைத்துள்ளது.

ஐசிசி கனவு டெஸ்ட் அணி: டீன் எல்கர், டேவிட் வார்னர், விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், புஜாரா, பென் ஸ்டோக்ஸ், டி காக், அஸ்வின், மிட்செல் ஸ்டார்க், ரபடா, ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஐசிசி கனவு ஒருநாள் அணி: டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), பாபர் அஸம், டி வில்லியர்ஸ், டி காக், பென் ஸ்டோக்ஸ், டிரெண்ட் போல்ட், ஹசன் அலி, ரஷித் கான், பூம்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com