தேசிய கூடைப்பந்து: ராஜஸ்தான் வெற்றி

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் ராஜஸ்தான்அணி வெற்றி பெற்றது.

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் ராஜஸ்தான்அணி வெற்றி பெற்றது.
இரு பாலருக்கான 68-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 3-ஆவதுநாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் ராஜஸ்தான் அணி 85-71 என்ற புள்ளிகள் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஹிமாசல பிரதேசம் 70-34 என்ற புள்ளிகள் கணக்கில் சிக்கிம் அணியை வென்றது.
இதனிடையே, கர்நாடக அணி 78-54 என்ற கணக்கில் கேரளத்தை வீழ்த்தியது. கர்நாடக வீரர் ஜீதானந்தர் சிங் அதிகபட்சமாக 17 புள்ளிகளை கைப்பற்றினார். சண்டீகர் 88-28 என்ற கணக்கில் அருணாசல பிரதேசத்தை வீழ்த்தியது. இதில் சண்டீகர் வீரர் மோனு அதிகபட்சமாக 10 புள்ளிகள் வென்றார். இந்திய ரயில்வே 74-65 என்ற கணக்கில் குஜராத் அணியை வீழ்த்த, இந்திய ரயில்வேயில் பல்பிரீத் 17 புள்ளிகள் வென்று அணியின் வெற்றிக்கு உதவினார்.
மகளிர் பிரிவு ஆட்டங்களில் தில்லி 53-73 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிர அணியிடம் வீழ்ந்தது. அதேபோல் கர்நாடக அணி மத்திய பிரதேசத்தை 79-68 என்ற கணக்கில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான கேரளம் 76-62 என்ற புள்ளிகள் கணக்கில் சத்தீஸ்கரை வீழ்த்தியது. இந்திய ரயில்வே அணி 91-38 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜஸ்தானை பந்தாடியது. இந்திய ரயில்வேயில் மது குமாரி அதிகபட்சமாக 24 புள்ளிகள் வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com