கூடைப்பந்து: தமிழகம் வெற்றி

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய ரயில்வேயை வீழ்த்தியது தமிழகம்.

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய ரயில்வேயை வீழ்த்தியது தமிழகம்.
 68-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் ஆடவர் பிரிவில் தமிழகம் 95-85 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய ரயில்வே அணியை வீழ்த்தியது. தமிழக அணியில் அரவிந்த் 23 புள்ளிகள் வென்றார்.
 இதர ஆட்டங்களில் மத்திய பிரதேசம் 77-65 என்ற புள்ளிகள் கணக்கில் பிகாரை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் உத்தரகண்ட் 85-45 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள அணியை வீழ்த்தியது. சர்வீசஸ் 85-46 என்ற கணக்கில் சத்தீஸ்கரையும், கர்நாடகம் 78-40 என்ற கணக்கில் ஒடிஸாவையும் பந்தாடின. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி, ஹரியாணாவை வென்றது.
 தமிழகம் தோல்வி: மகளிர் பிரிவு ஆட்டத்தில் கேரளம் 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழகத்தை வென்றது. கேரள தரப்பில் ஜீனா 17, தமிழக தரப்பில் ஸ்ரீவித்யா 16 புள்ளிகள் வென்றனர்.
 இதர ஆட்டங்களில் மகாராஷ்டிரம் 82-71 என்ற கணக்கில் ராஜஸ்தானை வென்றது. சத்தீஸ்கர் 85-69 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தையும், இந்திய ரயில்வே 105-30 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானாவையும் வீழ்த்தின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com