ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முன்னணி வீரர்களான ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்கள்.
இந்நிலையில் மற்றொரு முன்னணி வீரரும் 5 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4-ஆவது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவின் சங் ஹியோனை திங்கள்கிழமை எதிர்கொண்டார்.
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சங் ஹியோன், 6-7 (4-7), 5-7, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் 12 கிராண்ட்ஸலாம் பட்டங்களை வென்றுள்ள நோவக் ஜோகோவிச், 6-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.