ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் சைமோனா ஹேலப் - கரோலின் வோஸ்னியாக்கி ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் - போட்டித் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் மோதினார்கள். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3 4-6 9-7 என்ற செட் கணக்கில் சைமோனா ஹேலப் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு அரையிறுதிச் சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி - எலிஸ் மெர்டன்ஸ் ஆகியோர் மோதினார்கள். இதில் 6-3 7-6(2) என்ற நேர் செட்களில் வெற்றியடைந்தார் கரோலின்.
இதையடுத்து, இறுதிச்சுற்றில் சைமோனா ஹேலப் - கரோலின் வோஸ்னியாக்கி ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள். இருவருமே இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை. அந்த வகையில் இறுதிச்சுற்று அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளது.