முதல் ஒருநாள்: புவனேஸ்வர் விலகல்! இந்திய அணி பந்துவீச்சு!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை மேற்கொள்கிறது.
முதல் ஒருநாள்: புவனேஸ்வர் விலகல்! இந்திய அணி பந்துவீச்சு!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை மேற்கொள்கிறது.

நாட்டிங்கமில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். இதையடுத்து சித்தார்த் கெளல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமாகியுள்ளார். மற்றபடி இந்திய அணியில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. இந்த ஆட்டத்திலும் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார். உமேஷ் யாதவ், சித்தார்த் கெளல், குல்தீப் யாதவ், சாஹல், பாண்டியா ஆகியோர் பந்துவீச்சாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com