100 சதவீதம் தகுதி இல்லாத வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மாற்றப்படுவர் என குரோஷிய அணி பயிற்சியாளர் ஸாட்கோ டேலிச் தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களும் இறுதி ஆட்டம் குறித்து அறிந்துள்ளனர். தாங்கள் 100 சதவீதம் உடல் தகுதி இல்லையென்றால் உண்மையை தெரிவிப்பிதாக கூறியுள்ளனர். அரையிறுதியில் கோலடித்த பெரிசிச், மரியோ மண்ட்ஸýகிக் உள்ளிட்ட 5 வீரர்கள் பயிற்சிக்கு வரவில்லை. சிறிய காயங்களால் வீரர்கள் அவதிப்படுகின்றனர் என்றார்.