பிரெஞ்சு ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்திய இத்தாலி வீரர்!

பிரெஞ்சு ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்திய இத்தாலி வீரர்!

வெள்ளியன்று நடைபெறவுள்ள அரையிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்கொள்கிறார்...

பிரெஞ்சு ஓபன் போட்டியின் காலிறுதியில் முன்னணி வீரர் ஜோகோவிச் தோல்வியடைந்துள்ளார்.

பாரிஸில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் 72-வது இடத்தில் உள்ள இத்தாலியின் மார்கோ செச்சினாடோ, 6-3, 7-6 (4), 1-6, 7-6 (11) என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜோகோவிச்சைத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். கடந்த 40 வருடங்களில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் இத்தாலி வீரர் என்கிற பெருமையை மார்கோ பெற்றுள்ளார். 

வெள்ளியன்று நடைபெறவுள்ள அரையிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்கொள்கிறார் மார்கோ செச்சினாடோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com