இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு பிசிசிஐ சிறப்பு விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் நடைபெற்றது.
சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஆண்டுதோறும் பிசிசிஐ விருதுகள் வழங்குகிறது. இதன்படி கடந்த 2016-17, 2017-18 என இரு சீசன்களுக்கான சிறந்த வீரர் (பாலி உம்ரிகர் விருது) விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மகளிர் கிரிக்கெட் அணியில் 2016-17 சீசனுக்கு ஹர்மன்பிரீத் கெளர், 2017-18 சீசனுக்கு ஸ்மிருதி மந்தானா ஆகியோர் சிறந்த வீராங்கனைகளுக்கான விருதுகளை பெற்றனர். மேலும் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் 4 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும்
மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம், தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்துக்கும் விருது வழங்கப்பட்டது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்த வீரர்கள் ஜலாஜ் சக்சேனா, பர்வேஸ் ரசூல், க்ருணால் பாண்டியா, ஆகியோரும் சிறந்த ஆல் ரவுண்டர்கள், சிறந்த ஒருநாள் போட்டி வீரர் உள்ளிட்ட விருதுகளை பெற்றனர்.