அகில இந்திய பாட்மிண்டன் தரவரிசைப் போட்டி: செளரப் வர்மா, உஜிதா ராவ் முதலிடம்

பெங்களுருவில் நடைபெற்ற யோனக்ஸ்-சன்ரைஸ் அகில இந்திய பாட்மிண்டன் தரவரிசைப் போட்டியில் செளரவ் வர்மா, உஜிதா ராவ் ஆகியோர் பட்டம் வென்றனர்.

பெங்களுருவில் நடைபெற்ற யோனக்ஸ்-சன்ரைஸ் அகில இந்திய பாட்மிண்டன் தரவரிசைப் போட்டியில் செளரவ் வர்மா, உஜிதா ராவ் ஆகியோர் பட்டம் வென்றனர்.
இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற இப்போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் செளரவ் வர்மா 17-21, 21-14, 21-18 என்ற செட் கணக்கில் பிரதுல் ஜோஷியை வீழ்த்தி பட்டம் வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய் உஜிதா ராவ் 21-5, 7-21, 21-15 என்ற செட் கணக்கில் ரிதுபர்ண தாûஸ தோற்கடித்து பட்டம் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜுன்-ராமச்சந்திரன் இணை 21-14, 21-16 என கிருஷ்ணா-துருவ் இணையை வென்றது. மகளிர் இரட்டையரில் ரிதுபர்ணா-ஆராதா இணை சிம்ரன் சிங்கி-ரித்திகா தக்கர் இணையை 21-10, 21-12 என வீழ்த்தியது.
கலப்பு இரட்டையரில் துருவ்-மேகனா இணை 19-21, 21-12, 21-9 என அருண்-ஆராதா இணையை வென்றது. இப்போட்டிகள் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி ஆட்டமாகவும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com