17:ஸ்டட்கர்ட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். இதன் மூலம் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் ஆனார்.
ஏடிபி போட்டிகளில் ஒன்றான ஸ்டட்கர்ட் கோப்பை போட்டி இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சுவிட்சர்லாந்தின் ஃபெடரர் 6-4, 7-6, என நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரனோயிக்கை வீழ்த்தி பட்டம் வென்றார். இது ஃபெடரர் பெறும் 98-ஆவது ஏடிபி பட்டமாகும். இந்த வெற்றி மூலம் அவர் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் அந்தஸ்தை பெற்றுள்ளார். விம்பிள்டன் போட்டியில் 9-ஆவது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ள ஃபெடரருக்கு இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.