உலகின் இரண்டாவது இளைய செஸ் கிராண்ட் மாஸ்டரானார் சென்னை வீரர் பிரகனாநந்தா.
இத்தாலியில் நடைபெற்றுவரும் கிரென்டைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதின் மூலம் 12 ஆண்டுகள் 10 மாதங்கள், 13 நாள்கள் மட்டுமே நிறைந்த பிரகனாநந்தா இந்தியாவின் இளைய மற்றும் உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டரானார்.
கிராண்ட் மாஸ்டர் புருஜ்செர்ஸ் ரோலண்டுடன் இணை சேர்ந்த பிரகனானந்தா விளையாடியதின் மூலம் இந்த சிறப்பைப் பெற்றார். உக்ரைனின் செர்ஜெட் கார்ஜாகின் உலகின இளைய செஸ் கிராண்ட் மாஸ்டராக உள்ளார்.