ஐ-லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சர்ச்சில் பிரதர்ஸ் எஃப்சி அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கான கோலை வில்லியம் அசீடு ஒபோகு, 15-ஆவது நிமிடத்தில் அடித்தார். இப்போட்டியில் பஞ்சாப் அணி பங்கேற்றுள்ளது இது 2-ஆவது சீசனாகும்.
மினர்வா பஞ்சாப் அணி மொத்தம் ஆடிய 17 ஆட்டங்களில் பெற்ற 32 புள்ளிகளின் மூலமாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருந்தது.